வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்  திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்

கோவையில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்  திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது..

கோவை உக்கடம் அல் அமீன் காலனி இரண்டாவது விதியைச் சேர்ந்தவர் முகமது சன்ஃபர். கோவை பெரிய கடை வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் சன்ஃபர், நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு கிளம்பிய சன்பர், தனது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வந்து பார்க்கும்போது, இருசக்கர வாகனம் மாயமாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் நள்ளிரவில் வரும் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை லாபவகமாக திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

 

இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகமது சன்ஃபர் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.