சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு..!

மிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனைத்து சிறைச்சாலைகளிலும் கேமரா பொருத்தும் பணியும், சிறையில் பணியில் இருக்கும் காவலர்களின் உடையில் கேமரா பொருத்தப்படும்.

அதன்மூலம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வசதியை உருவாக்கி அனைத்து சிறைகளையும் கண்காணிப்பில் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. சிறை காவலர்களின் உடைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பு பாதையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.