வாகன ஓட்டிகளே ஷாக்கிங் நியூஸ் இதோ… செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு..!!

சுங்கச்சாவடிகளில் ஆண்டு தோறும் சுங்கக் கட்டணம் உயர்த்தும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காண சுங்கக் கட்டண உயர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1 ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரை உயரவுள்ளது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் திருச்சி சமயபுரம் சுங்கசாவடி, திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உட்பட 28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.