ஜோதிடத்தில், கிரகங்களின் மாற்றம் அல்லது பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை காணலாம். கிரகங்களின் ராசி மாற்றம் நல்ல பலன்களையும் தீய பலன்களையும் ஏற்படுத்தும். ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதம் தொடங்க உள்ளது. ஜூன் மாதத்தில் சில கிரகங்கள் ராசி மாறப் போகின்றன. ...

கவுகாத்தி :அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் நடப்பு ஆண்டில் முதன்முறையாக பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்திற்கு மொத்தம் 32 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ...

ஐரோப்பிய நாடுகளில் மங்கிபாக்ஸ் (monkeypox) நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 100 பேருக்கும் மேல் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் இதுதொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அவர்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

வாஷிங்டன்: அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளாத நிலையில், அந்நாட்டில் குரங்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரத்தைச் சேர்ந்த நபர் தனது நண்பர்களை சந்திப்பதற்காக ஏப்ரல் இறுதியில் கனடாவிற்கு சென்று மே மாத தொடக்கத்தில் அமெரிக்கா திரும்பினார். அவருக்கு தொடர் காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் ...

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திருப்பூர், அவினாசி, கோவை அரசு , மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து புதிய குழந்தைகளுக்கான அதிநவீன சிகிச்சை பிரிவு, கொரோனா ஐ.சி.யு பிரிவு, இருதய நோய் பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ...

கோவையை அடுத்த பீடம்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் .இவரது மகன் முருகவேல் (வயது 39) இவர் பீடம்பள்ளி ஸ்ரீராம் கார்டனில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது ரஞ்சிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.நேற்று அவர் தனது ஒர்க்ஷாப்பில் இருசக்கர வாகனத்தை தண்ணீர் அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ...

சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு என அதிகாரபூர்வ அறிவிப்பு. சீனாவின் ஹாங்ஷூ நகரில் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த 19-ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விளையாட்டு போட்டியை ஒத்திவைப்பதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் செப்டம்பர் ...

கரோனா வைரஸின் எக்ஸ்.இ திரிபு இந்தியாவில் ஒருவருக்குக் கண்டறியப்பட்டிருப்பதாக, மத்திய சுகாதாரத் துறையின் ஆய்வு அமைப்பான இன்ஸாகாக் (The Indian SARS-CoV-2 Genomics Consortium) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஏப்ரல் 25-ம் தேதியிட்ட அந்த அறிக்கை நேற்று (மே 4) வெளியானது. எனினும், தொற்றுக்குள்ளானவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் எனும் தகவல்கள் அதில் குறிப்பிடப்படவில்லை. ‘கடந்த வாரத்தை ...

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இந்த பலத்த மழையில் அங்குள்ள கனரா வங்கி அருகே உள்ள மரம் வேருடன் முறிந்து விழுந்துள்ளது. இந்த மரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளிகள் வசித்துவந்த நிலையில், அவை கிளையில் சிக்கி பறந்த ...

சென்னை: சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 196 -ஆக உயா்ந்துள்ளது. சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சோந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவருக்கு கடந்த 19-ஆம் தேதி ...