சென்னை: துபாயில் மார்ச் 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவை வளப்படுத்த உயர்கல்வி, தொழில் முறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை ஆராய்ந் தறிதல் இம்மாநாட் டின் நோக்கமாகும். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ...

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு பயணிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலத்தில் வாங்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மற்றும் அமிர்தசரஸ் இடையே பயணம் செய்ய இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தலாம். இந்த டிக்கெட்டில் 9 ...

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றசம்பவங்களை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்புக்காகவும் சிஎம்டிஏ அதிகாரி தலைமையில், 40 போலீசார் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், வெளியூர் பயணிகளை குறிவைத்தும் வழிப்பறி, செயின் மற்றும் செல்போன் பறிப்பு, பிக்பாக்கெட், லேப்டாப் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து ...

பாகிஸ்தான் முழுமைக்கும் மின்சாரம் சப்ளை செய்யும் தேசிய பகிர்மானத் தளத்தில் ஏற்பட்ட கோளாறால், அந்த நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. இது குறித்து பாகிஸ்தான் மின்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் ” இன்று காலை 7.34 மணிக்கு பாகிஸ்தானின் தேசிய மின்பகிர்மானத்தில் திடீரென மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டது. இதனால் நாடுமுழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டது. ஆனால், ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இதனால் காலியாக ...

அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ...

வீட்டு வேலைக்கு என்று சொல்லி வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அடிமைபோல் அடைத்து வைத்து கொடுமை செய்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் அங்கு மாட்டியுள்ளனர் எனவும் மஸ்கட்டில் இருந்து தாயகம் திரும்பிய பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த கூலி தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப வறுமை ...

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் காச நோய் பாதிப்பு 19 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள்பட்ட பெருந்தொற்றுகளில் ஒன்று காசநோய். பாக்டீரியாவால் பரவக்கூடிய இந்த தொற்றுக்கு தொடர் இருமல், சளி, காய்ச்சல், உடல் எடை குறைவது உள்ளிட்டவை பிரதான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. நாள்பட்ட நோயாளிகளிடம் இருந்து அதிகளவில் பரவ கூடியது என்ற நிலையில், 1962 ...

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மலேசியாவில் இருந்து வந்த ஒருவர் உள்ளிட்ட 4 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. ...

மகாராஷ்டிராவில் இருந்து சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் அதே வேளையில், பசு வதை தடுக்கப்பட்டால் பூமியின் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கூறியுள்ளது. 16 க்கும் மேற்பட்ட பசுக்களையும் அவற்றின் சந்ததியினரையும் உட்காரவோ, உண்ணவோ, குடிக்கவோ முறையான ஏற்பாடுகள் இல்லாமல் நிரம்பிய லாரியில் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதற்காக ...