சமீப ஆண்டுகளாகவே பல்வேறு வகையான கொடிய தொற்று நோய்கள் தீவிரமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. கொரோனா பெருந்தொற்று தொடங்கி எபோலா, H3N2 இன்ஃப்ளூயன்ஸா, பறவை காய்ச்சல், மங்கிபாக்ஸ் என பலவிதமான தொற்று பரவல் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது புதிய வகை தொற்று பாதிப்பு ஒன்று உலகிலேயே முதல் ...
சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும். சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்த முதல்வர் பூபேஷ் பாகேல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் ...
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் சென்று கொண்டு இருந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விடாமல் இருக்க திருப்பிய போது எதிரே மின் ...
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கோவில்கள், மடங்களில் உள்ள அரிய, பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பராமரித்து பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதையொட்டி ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக்குழுவை அறிவித்தார். இந்த குழு ...
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கெம்பநாயக்கனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் மூர்த்தி (25). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் வீட்டில இருந்து கொண்டு மாடு மேய்ப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மூர்த்தி தனது கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்தவர் கிட்டான் (65). கூலித்தொழிலாளியான இவர் ஏழு வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் திடீரென ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகம் கெத்தேசால் வனப்பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என வனத்துறையினர் தேடிப் பார்த்தபோது அங்கிருந்த ஓடையின் கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்ததை ...
கோவை தியாகி குமரன் வீதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் அருகே மாநகராட்சி பார்க்கிங் உள்ளது. இங்கு 74 இருசக்கர வாகனங்களும் 4 ஆட்டோக்களும் பல நாட்களாக கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லதா சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் சென்று அந்த வாகனங்களை கைப்பற்றினார்கள். இந்த வாகனங்கள் ...
சென்னை : நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 50 சதவீதம் வரை உயர்த்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழிகாட்டி மதிப்புக்கான மாநில மையக் குழு வாயிலாக மட்டுமே, வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த நடைமுறைகளை வகுக்க முடியும்.பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் தலைமையில், இதற்கான கூட்டம் ‘ஆன்லைன்’ முறையில் நேற்று நடந்தது. ...













