மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், ...
பத்திரப்பதிவு செய்த சிறிது நேரத்திலேயே தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை பத்திரப்பதிவுத் துறையும் வருவாய்த்துறையும் இணைந்து கடந்த ஜூன் 15 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உட்பிரிவு செய்யும் தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம். ஒரு நிலத்தையோ, வீட்டையோ ...
கோவை : தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா குப்பனூரை சேர்ந்தவர்கள் கோவிந்தன் ( வயது 42 )கோவிந்தராஜ் ( வயது 42)இவர்கள் இருவரும் கோவையில் பாதாளை சாக்கடை அமைக்கும் திட்டத்தில்கூலி வேலை செய்து வருகிறார்கள்.நேற்று ஆர்.எஸ். புரம் தியாகி குமரன் மீது பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது மண் சரிந்து கோவிந்தராஜ், கோவிந்தன், இருவரும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் சி. காலனியை சேர்ந்தவர் தஸ்தகீர் பாட்ஷா ( வயது 65) இவர் நேற்று பொள்ளாச்சி -பாலக்காடு ரோட்டில் நடந்து சென்றார். அங்குள்ள செடி முத்தூர் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் தஸ்தகீர் பாட்ஷா படுகாயம் அடைந்தார். ...
கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டி கூடையில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. பாம்பு பிடி வீரரான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த சித்ரன் என்பவருக்கு தகவல் தரப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து மசக்காளிபாளையம் பகுதிக்கு சென்ற சித்திரன், அங்கு பூந்தொட்டி செடியில் இருந்த பாம்பை பார்த்தார். அப்போது ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை சன்னதி தெருவில் நேற்று இரவு நிறுத்தப்பட்டிருந்த காரில் முன் இருக்கை பகுதியில் வரிசையாக மண்டை ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வாரணாசி பகுதியில் இருந்து அகோரி ஒருவர் திருவண்ணாமலைக்கு காரில் வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மாட வீதி வழியாக ...
குஜராத்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. நேற்று நண்பகல் 12 மணியளவில் 50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. 17 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிகாலை 5 மணி அளவில் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக ...
கோவை : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வான் கரம்பேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மகன் கணேசன் (வயது 36) கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.நேற்று வேலை முடிந்த பிறகு அங்குள்ள இரும்பு பைப்பை தொட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ...
திருச்சியில் தமிழக சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த எஸ் ஆர் எம் ஹோட்டலின் குத்தகை காலம் நிறைவடைந்ததால் இன்று கையகப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாமக தலைவர் அன்புமணி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் ...
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. செஞ்சியில், சுமார் ரூ.7 கோடிக்கும், குந்தாரப்பள்ளியில் ரூ.8 கோடிக்கும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார ஆட்டுசந்தை பிரபலமானதாக உள்ளது. வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த வார ஆட்டு சந்தைக்கு செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் ...













