டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அத்துடன் நீட் தேர்வு விலக்கு உட்பட தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களையும் பிரதமரிடம் வழங்கி ஏற்கனவே அது தொடர்பாக முன் வைத்த கோரிக்கைகளை நினைவூட்டினார் ஸ்டாலின். ...

தமிழகத்ததிலிருந்து குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து, அண்டை மாநிலமான கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. பொள்ளாச்சி பகுதியில் இருந்து அதிக அளவில் கருங்கற்கள், கேரளத்தின் திருச்சூருக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. குறைந்த அளவு கருங்கல் ஏற்றிச் செல்ல அனுமதி பெற்றுவிட்டு அதிகமான, கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவதால் தமிழகத்தின் இயற்கை வளங்கள் பறிபோகின்றன. பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூரில் இருந்து, திருச்சூருக்கு ...

சென்னை: எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்றும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ...

காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் தேசிய கட்சியான காங்கிரஸ் பலமான பின்னடைவை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ...

சென்னை: இலங்கை மக்களுக்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பை தொடர்ந்து இன்று வரைவோலையாக அந்த நிதியை தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பினார். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்ப மத்திய அரசு அனுமதி ...

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். குடியரசு துணைத் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் பயணிகள் விமானத்தில் அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். ...

தில்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து ...

அதிமுக விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறோம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 16-வது சட்டமன்றப் பேரவை நடவடிக்கை குறிப்புகள், சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத் திறப்பு விழாவின் சிறப்பு வெளியீடு போன்றவற்றை பொது மக்களின் பார்வைக்கு சட்டமன்றப் பேரவையின் இணையதளமான https://www.assembly.tn.gov.in இல் பதிவேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ...

அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் ...

புதுடெல்லி: பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் நம்பகமான அமைப்பு அல்லது நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தேர்தல் ஆணையத்திற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. ‘இப்சோஸ் இந்தியா’ என்ற நிறுவனம் நாடு முழுவதும் நான்கு பெருநகரங்கள், அதற்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்களில் இந்தியாவில் மிகவும் நம்பகமான நிறுவனங்கள் குறித்த ஆய்வுகளை ...