ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தொடங்கப் போகும் தனி கட்சிக்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் 51 தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சீனியர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை; ராகுல் காந்தியின் பிஏ கூட ...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ...

மது வணிகம் மூலமான கலால் வரி வருவாய் இரு மடங்காக உயர்ந்திருப்பது வேதனையளிப்பதாகவும், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பா.ம.க.தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து ...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. உயா்கல்வியின் வளா்ச்சி தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பங்கேற்கும் மாநாடு சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முன்னதாக, ஆகஸ்ட் 17ஆம் தேதி ...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மறைந்த தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஜெயலலிதா அவர்கள்‌ 22.09.2016 அன்று மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள்‌ குறித்தும்‌, அதைத்‌ தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம்‌ வரையிலும்‌ அவருக்கு அளிக்கப்பட்ட ...

முருகப்பா குழுமத்தின் 3 சக்கர மின்வாகனத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் முருகப்பா குழுமம் சார்பில் மின்சார ஆட்டோவை அறிமுகம் செய்தார். முதலமைச்சர் முக ஸ்டாலின். மின் பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோ ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை தலைமை செயலகத்தில் ...

புஜ்: குஜராத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சதி நடந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் புஜ் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மோடி அதன்பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது. இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் குஜராத் மாநிலத்தின் பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடைபெற்றது. மேலும், இந்த மாநிலத்துக்கு வரும் முதலீடுகளை நிறுத்தவும் ...

புதுடெல்லி: கடந்த 2019-ல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனுடன் இணைந்திருந்த லடாக்கை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது பாஜகவிற்கு சாதகமாகி உள்ளது. இதனால், நேற்று முதல் ஜம்மு-காஷ்மீரின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...

புது டெல்லி: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களான அகமதாபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு நகரங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடி உள்ளனர். பிரதமர் மோடியும் இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ...

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17, அன்று நடைபெறும் என செய்தி வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக அக்கட்சியின் சார்பில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ...