வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!

ருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றசாட்டு.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்வதற்கான FMG தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக கடந்த ஜுலை மாதம் மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளைப் போல தி.மு.க.வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்களோ? என கேள்வி எழுப்பியுள்ளார்.