ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் ...
“தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் தடை செய்யப்படும்” என்று, புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 22-ம் தேதி, 2022 – 2023-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ...
திருப்பூர்: தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் வளரும் ஊராக திருப்பூர் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் பல்வேறு தொழில்களில் முன்னேறி வருகிறது எனவும், திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர ...
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் ...
நடிகர் விஜயகாந்த்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாடு அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றியை நீண்டகாலம் நீடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அரசியலில் இயங்கி வருகிறார். ஆகஸ்ட் ...
கோவை:திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அதன் மாநகர செயலாளர் நிர்மல் குமார் தலைமையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-ஓசூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய விஸ்வ இந்து பரிஷத் தமிழக மாநில செயலாளர் சு.வே.ராமன் விநாயகர் சதுர்த்தி விழாவை ...
கோவை பீளமேட்டில் தற்போது உள்ள பன்னாட்டு விமான நிலையம் 627 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ராணுவத்துக்கு சொந்தமான 135 ஏக்கரும், புறம் போக்கு நிலம் 30 ஏக்கரும், தனியாருக்கு சொந்தமான 462 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் ராணுவத்துக்கு சொந்தமான நிலம் மற்றும் புறம்போக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டன. தனியாருக்கு ...
கோவைக்கு முதலமைச்சர் வருகையையொட்டி மாநகராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்காக அறை குறையாக பணிகளை செய்து வந்தாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக கோவைக்கு வருகை தந்து உள்ளார். இன்று ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் பொள்ளாச்சி ...
தி.மு.க வினரின் விஷம பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கோவை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி. கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொள்ளாச்சியில் அ.தி.மு.க வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இணைவதாக தி.மு.க வினர் விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் அது முற்றிலும் தவறானது என்றும் ...
கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வாழைத்தாரை தூக்கிச் சென்ற பொதுமக்கள் கோவை: கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற நலத் திட்ட நிகழ்ச்சி முடிந்த கையோடு அங்கிருந்த பொதுமக்கள் தோரணத்திற்காக கட்டப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் இளநீர் ஆகியவற்றை தூக்கி சென்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 4 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு ...