கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு காரில் இருந்த சிலிண்டர் மற்றும் மர்ம பொருட்கள் வெடித்ததில் கோட்டை மேட்டை சேர்ந்த ஜமேஷாமு பின் என்பவர் அதே இடத்தில் பலியானார்.இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் அவரது வீட்டில் இருந்த 75 கிலோ வெடிபொருட்கள், கேன்கள், முக்கியதஸ்தா ...
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைதியான கோவை அனைவருக்கும் தேவை என்ற அடிப்படையில் கோவையில் அமைதியை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு கலெக்டர், ...
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோட்டைமேட்டில் காரில் சிலிண்டர் வெடித்து பலியான சம்பவம், கைது நடவடிக்கை, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஅதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ...
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையரை சந்தித்த பிறகு அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி தீபாவளி கொண்டாடினர். சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கோவை ...
கோவையில் வரும் 31ம் தேதி பா.ஜ.க சார்பில் பந்த் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ‘கடந்த 1998 ஆம் ஆண்டு திமுக அரசு ஆண்டபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது ...
கோவை : கோவை சம்பவத்தை போன்று மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை வழங்க கடமைப்பட்டுள்ளதாக கூறி, பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கோவை உக்கடம் கார் வெடிப்பு விவகாரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்தார். கோவை சம்பவ விசாரணையை தமிழக முதல்வர் ...
கடந்த ஆண்டு புதுச்சேரியின் ஈடன் கடற்கரையும், தமிழகத்தில் கோவளம் கடற்கரையும் இந்த விருதைப் பெற்றிருந்தது. டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையால் (FEE) சுற்றுலாப் பயணிகளின் உயர் சுற்றுச்சூழல் மற்றும் தரமான தரத்திற்காக சான்றிதழ் வழங்கப்படுகிறது. தூய்மையான சுற்றுச்சூழலுக்கு உகந்த இடங்களுக்கு வழங்கப்படும் நீல கடற்கரைகளின் பட்டியலில் லட்சத்தீவின் இரண்டு கடற்கரைகள் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் லட்சத்தீவுகளில் ...
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் ஏதோ ஆபத்து இருப்பதை உணர்த்துகிறது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்தார். கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு கார் சென்றது. திடீரென்று அந்த ...
முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க, அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி ...
கோவையில் கைப் பற்றியது 1.5 டன் வெடிப் பொருள் – பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்!!! கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் ...













