டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 6ஆம் நாள் அமர்வு இன்று கூடுகிறது.. அதானி குழுமம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இந்தாண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ...
பெங்களூரு: பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சகம் சார்பில் ”இண்டியா எனர்ஜி வீக்-2023” கண்காட்சி நேற்று தொடங்கியது. இதன் துவக்க விழாவில் ஆளுநர் தாவர்சந்த்கெலாட், முதல்வர் பசவராஜ்பொம்மை, ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்து கொண்டனர். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எரிசக்தி கண்காட்சியை தொடங்கி வைத்தார். நவீன சோலார் அடுப்பு, ...
பிரதமர் மோடி அழைப்பை ஏற்று போப்பாண்டவர் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்த பிறகு போப்பாண்டவர் தற்போது தான் இந்தியாவுக்கு அவர் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ சமய போதகராக இருக்கும் போப்பாண்டவர் உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் உலகில் பல நாடுகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் ...
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். நேற்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு, இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார். இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் தனது ...
கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூக நீதி. எல்லோருக்கும், எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி. தமிழகத்தில் நடந்து வரும் ...
6ஜி தொழில்நுட்பத்தில் சீனாவை சமாளிப்பதற்காக இந்திய, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க நாடுகள் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளன. இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சீனா கடந்த 2019ம் ஆண்டு முதலே 6ஜி தொழில்நுட்பத்தில் கோலோச்சும் விதமாக தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் டெலிகாம் மற்றும் ...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளள்து. புது தில்லி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளள்து. ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக ...
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பேரணியாக சென்று அஞ்சலி. முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிப்-3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் 54-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அமைதிப்பேரணி வகுத்து சென்றனர். இந்த பேரணி, அண்ணா ...
புதுடெல்லி: அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி ...
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவையொட்டி வருகிற 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ...