வரும் 24ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு- ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை.!!

திருச்சியில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் முடிவு செய்தனர்.

அதன்படி, வரும் 24ம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 80 மாவட்ட செயலாளர்களை ஓ.பி.எஸ். நியமித்துள்ளார். இதன்படி, ஆதரவாளர்களின் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், தேனியில் உள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருச்சியில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் மாநாடு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.