சென்னை: எனக்கு வாக்களித்த மக்களுக்காக நான் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் நான் ஆய்வுக்காக போகவில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு குறித்து செய்தியாளர்களிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ...

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்* உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தே.மு.தி.க தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் ...

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சென்னையில் இன்னொரு பகுதியில் அமோனியம் வாயு கசிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதுபோன்று இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது முதல் முறையல்ல, பலமுறை ...

திருச்சியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது 2015-ல் மழை வெள்ளம் தாக்கியபோது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால், இம்முறை பேய் மழை பெய்த போதும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கைகள் எடுத்ததால் சென்னையில் பெருமளவு பாதிப்புகள் குறைந்துள்ளன. இரண்டாவது முறையாக தென் மாவட்டங்களை மழை வெள்ளம் ...

முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், jct பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா துவங்குவதற்கு முன்பாக ஜமாப், ...

பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் விலங்குகள் இடம் போய் ஓட்டு கேட்கட்டும் கோவையில் விவசாயிகளின் முத்தரப்பு கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்!!! கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக விவசாயிகளின் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வன விலங்குகளால் பாதித்த விவசாயிகள், மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர், மேலும் ...

கோவை, செல்வபுரம் பகுதியில் பண மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அ.மு.மு.க பிரமுகர் கைது  கோவை,  செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அலுமினிய வியாபாரியான ரவிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வசித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையிலே கண்ணனுக்கு ...

திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது. இந்நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.951 கோடியில் புதிய முனையம் அமைக்கும் ...

குவாரி கிரசர்களில் கமிஷன் கேட்கும் புரோக்கர்கள்: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!!!   கோவை மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் எடுப்பது சப்ளை செய்வது போன்றவற்றில் புரோக்கர்கள் தலையீடு அதிகமாய் விட்டது. அமைச்சர் ஆளு என சொல்லி சிலர் கோவை மாவட்டத்தில் கல்குவாரிகள் , கிரஷர் , டிப்பர் லாரிகள் , ஜே.சி.பி போன்றவற்றில் வசூல் வேட்டை ...

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்பதால், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ...