அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை கடந்த 2017ல் மே ...

கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர். இந்த தொழிலின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை ...

புதுடெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவுடனான வர்த்தகத்தில் ரஷ்யாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் ஒரு செங்குத்தான அதிகரிப்பு உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட பத்து மடங்கு இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா அதிகரித்துள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் இப்போது இந்தியாவின் இறக்குமதி எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட பத்து சதவீதத்தை ...

இனி தமிழகத்தில் திட்ட அனுமதி பெறுவது, கட்டிடம் கட்ட அனுமதி, மனைகள் ஒப்புதல் பெறுவது என அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளும் நடைமுஐ நேற்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் அனைத்து துறைகளையும் காகிதமில்லா நடைமுறையை செயல்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு ...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு 10 ஆண்டு சிறை ஈமு கோழி மோசடி வழக்கில் உரிமையாளர்கள் இருவருக்கு தல பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு பெருந்துறையில் ஆர்.கே ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கண்ணுசாமி, மோகனசுந்தரம் இவர்கள் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக ...

கோவை: கரும்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு சங்கத்துடன் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் இணைந்து நடத்தும் கன்னல் என்ற பெயரில் கரும்பு விவசாயிகளுக்கான விழாவில் தென்மாநில கரும்பு விவசாயிகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக 24-ந் தேதி (சனிக்கிழமை) கரும்பு இயந்திரமயமாக்கல் குறித்த பயிலரங்கு நடைபெறுகிறது. இதில், சா்க்கரை ஆலை பணியாளர்கள், கரும்பு விவசாயிகள், இயந்திர உற்பத்தியாளர்கள், ...

கோவை: தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பல ...

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பூண்டு உள்பட காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டிற்கு இந்தியா முழுவதும் வரவேற்பு உள்ளது. நீலகிரியில் ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்யப்பட்ட வெள்ளை பூண்டு, நடப்பு மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ...

புதுடெல்லி: ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். ...

கோவை அவிநாசி ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது .இதற்காக மொத்தம் 306 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட வேண்டும். இதில் இதுவரை 273 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் விமான நிலையம், பீளமேடு ஆகிய இடங்களில் ...