தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3,92,70,000 செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கி வருகின்றன. இதற்கென ...

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பயிற்சி பள்ளி முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் பயிற்சி பள்ளி முதல்வர் வசந்தி செய்முறை தேர்வுக்கு மாணவிகளிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்ததாக மாணவிகள் மருத்துவக் கல்லூரி இயக்குனர்கத்துக்கு புகார் அனுப்பினர் ...

வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோவை – சில்சாா், திருவனந்தபுரம் – சில்சாா் ஆகிய 2 ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை – சில்சாா் வாராந்திர ரெயில் (எண்: 12515) ஜூலை 3, 10 ...

கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம் இலவசமாக,’டிராப் என் டிரா’ என்ற புதிய முயற்சியின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில், உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் முயற்சி பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிராப் என் டிரா என்னும் திரும்ப ...

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வகித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல்மைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பகவந்த் மான், அனைத்து வீடுகளுக்கும் ...

அன்னூர்: நூல் விற்பனை விலை சரிவால் ஸ்பின்னிங் மில்கள் திணறுகின்றன. நூற்றுக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.அன்னூர் தாலுகாவில், கரியாம்பாளையம், கணேசபுரம், தெலுங்குபாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், கெம்பநாயக்கன்பாளையம், கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 125 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. 3,000 ஸ்பிண்டில் திறன் முதல் 50,000 ஸ்பிண்டில் திறன் வரை உள்ள இந்த ...

நாட்டில் வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்,அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை இன்று அவர் வெளியிட்டார். அவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலில் முதன்மையான மாநிலங்களின் பிரிவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு ...

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்த 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் வகையில், காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர், `ஆர்டர்லி’ என்ற முறையில் உயர்அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த ...

கோவை உக்கடத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி நாளை( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால் , டி.கே. மார்க்கெட் ,ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ,உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, கலெக்டர் அலுவலகம் ...

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவால் செய்யப்பட்டிருந்த 34 ரயில்களை மீண்டும் இயக்க உள்ளதாக ரயில்வே ...