சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இதனை முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தொடக்கி வைத்தார். தவெக அரசு அமைந்த 100 நாட்களில் ரூபாய் 1 லட்சம் கோடி முதலீடு என்ற தகவல் வெளியானது. புதிய அரசு அமைந்த பிறகு மாநில அரசு சார்பில் நடைபெறும் முதல் முதலீட்டாளர் மாநாடு என்பதால் ...
அரிசி, காய்கறிகள், பலசரக்கு பொருட்களைத் தொடர்ந்து சாமானிய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.7 அதிகரித்து உள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் சர்க்கரைக்கு அதிக தேவை இருக்கும். விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் இனிப்பு பலகாரங்கள் தேவையும் விற்பனையும் அதிகரிக்கும். நடப்பு பருவத்தில் ...
இந்தியாவின் பட்டாசு உற்பத்தியின் தலைநகரமாகத் திகழும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஆண்டிற்கு ரூ.6,000 கோடி விற்பனை கொண்ட முன்னணி ஐரோப்பிய பட்டாசு இறக்குமதி நிறுவனம் ஒன்று, சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பட்டாசுகளைக் கொள்முதல் செய்யத் தயாராகி வருகிறது. இதற்கான முதற்கட்டமாக, சுமார் 50 ஏற்றுமதி கன்டெய்னர்கள் ...
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் ...
கோழித் தீவனங்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சமாக ரூ.6.75 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் ...
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை தற்போது இரண்டு நிறுவனங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா, இந்தியாவின் இருபெரும் ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள். மற்ற நிறுவனங்கள் யோசிக்கும் முன்பாகவே வேகமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் மற்ற நிறுவனங்களை விட பல மடங்கு கூடுதல் விற்பனையுடன் இரண்டு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னணியில் ...
இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா) போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது. இதனால் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் ஒதுக்கீடு மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு முழுமையாக நீக்கியுள்ளது. இதற்கான ...
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள எட்டு கோடி ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வருகிறது.இதன்படி வருங்கால வைப்பு நிதியில் மாதம் ரூ.1,800-க்கு மேல் செலுத்துவது விருப்ப தேர்வாக மாறுகிறது. அதேபோல் தங்கள் கணக்கில் இருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். அதற்கான விதிமுறைகள் ...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகம் சார்பில், சென்னையில் 9-வது ஜிஎஸ்டி (GST) தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் 9-வது ஆண்டு நிறைவை ...
ஜூலை 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்துள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் பார் டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, பார்களுக்கான கால ...













