கோவை விமான நிலையத்தில் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்…

கோவை விமான நிலையத்தில் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்…

கோவை சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த சிங்கப்பூர் விமான பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது பயணி ஒருவரின் நடவடிக்கை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். தொடர்ந்து அவரின் உடமைகளை பரிசோதனை செய்ததில் அவருடைய பையில் தங்க கட்டிகள், தங்கச் சங்கிலி ஆகியவை இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கோவை சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்தவரிடம் 1 கிலோ 220 கிராம் அளவிலான பத்து தங்க கட்டிகள், தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளனர். இதன் மதிப்பு ரூபாய் 90 லட்சம் 28 ஆயிரம் ஆகும் என்றார்.