கோவை: சென்னையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைடுத்து பேரவை தலைவர் அப்பாவு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதித்து சபாநாயர் அப்பாவு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத ...

சென்னை: சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி அதிமுகவினர் போராட்டம், கைது நடவடிக்கை என்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் காலையில் பெரும் பரபரப்பு ...

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என்று ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விசயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை ...

சென்னை : ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் செயல்படாமல் இருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விடை கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய வீரபெருமாள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி ஆகியோர் இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வாக்குமூலம் அளித்துள்ளனர். ...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் ...

கோவை குனியமுத்தூர் கரும்புக்கடை பகுதியில் உள்ள ராயல் நகரை சேர்ந்தவர் பீர்முகமது ( வயது 33) டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் நள்ளிரவில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது.இதில் பைக் முழுவதும் எரிந்து நாசமானது.இதுகுறித்து பீர் முகமது குனியமுத்தூர் போலீஸ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு ...

கோவை சுல்தான்பேட்டையை அடுத்த எஸ். அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 37). கூலி தொழிலாளி. சம்வத்தன்று ராம்குமார் வீட்டில் இருந்தார். அப்போது அவரது அண்ணன் ஆனந்தகுமார் (46) குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அவர் திடீரென தாயாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை பார்த்த ராம்குமார், அங்கு சென்று அண்ணனிடம் தாயிடம் தகராறில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கும் ...

கோவை ரத்தினபுரி பி.என்.சாமி காலனியை சேர்ந்தவர் வேலாயுதம்.இவரது மனைவி வசந்தி (வயது 45). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கணபதி நோக்கி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பி ...

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை சொல்லியும் மிரட்டியும் பாலியல் தொல்லை கொடுத்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த காசி என்கிற சுஜி கைதாகி சிறையில் உள்ளார். தலைமறைவாக இருந்த காசியின் கூட்டாளி கௌதம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். கோழி வியாபாரியான ...

திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடலிலும் முக்கிய உறுப்புகள் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே மனித மாமிசத்தை பெங்களூர் மந்திரவாதிகளுக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்று விடலாம் என்று பகவல்சிங், லைலா தம்பதியை ஷாபி நம்ப வைத்து ஏமாற்றிய தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...