ஓடும் பேருந்தில் விவசாயிடம் பணம், ஏ.டி.எம் கார்டு கொள்ளை..!

கோவை : கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்சுபி பல்லதி (வயது 59) விவசாயி நேற்று இவர் கோவை ரயில் நிலையத்திலிருந்து,பீளமேட்டுக்கு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவரது மனிபர்சை யாரோ திருடி விட்டனர். இதில் ரூ. 12 ஆயிரம் பணம், ஆதார் கார்டு , பேன் கார்டு, 2 ஏ.டி.எம். கார்டு ஆகியவை இருந்தது.இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.