திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரவீனா பல்லடத்தில் அழகு நிலையம் நடத்திவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீனாவின் தாய் பிலோமீனாள் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். ...

கோவையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து; இருவர் பலியான அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள்…  கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கதிரவன் என்பவர் தனது காரில் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி சுற்றுலா சென்று விட்டு மீண்டும் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி ...

கோவையில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த தொழிலாளி கைது கோவை ஒத்தக்கால்மண்டபம் ஒக்கிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). கூலி தொழிலாளியான இவரது வீட்டு அருகே கஞ்சா செடி வாசம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், செட்டிபாளையம் போலீசார் முத்துப்பாண்டி வீட்டின் அருகே சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது ...

அரசு பேருந்தை பிடித்து ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவரால் கோவையில் பரபரப்பு…. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே உள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை விமான ...

கோவை நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பிய ரூ. 6.5 கோடி தங்க நகைகள் கையாடல். பெங்களூரில் 25 வருடமாக இயங்கி மொத்த வியாபார நகைக் கடையில் இருந்து, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு நகைகள் விநியோகம் செய்யபட்டு வருகிறது. இந்த நகைக் கடையில் ஊழியராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சார்ந்த அனுமன் துவேசி. இவர், பெங்களூரில் ...

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: துடியலூரில் கைது செய்யப்பட்ட 3 பேர் வீடுகளில் கோவை மாநகர காவல் துறையினர் சோதனை… கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருந்தனர். அதேபோல் காந்திபுரம் 100 அடி சாலையில் இருந்த இந்து முன்னணி நிர்வாகியின் கடையிலும் மர்ம ...

கோவை விமான நிலையத்தில் 5.6 கிலோ தங்கம் பறிமுதல் : சென்னையை சேர்ந்த இருவர் கைது… சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான மூலம் கடத்தி வரப்பட்ட 5.6 கிலோ தங்க நகைகளை கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். சிங்கப்பூரில் இருந்து ...

நடத்தையில் சந்தேகம்: பெண் செவிலியரை கத்திக் குத்திய கணவன் – பட்டப் பகலில் கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!! கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த நான்சி என்ற பெண் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நான்சி நடத்தையில் கணவர் ...

கோவை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை, புறநகர் போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், ...

கோவை கிணத்துக்கடவை அடுத்த சொக்கனூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 69). இவரது மகன் கார்த்திகேயன் (30). இவருக்கும் ஜீவிதா (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி பிரிந்தனர். ஜீவிதா அவரது ...