கோவையில் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் தங்க செயின் திருட்டு..!

கோவை: நாகர்கோவில் பக்கம் உள்ள தக்கலையை சேர்ந்தவர் டெல்கி குமார்.இவரது மகள் அபிசினேகா ( வயது 21) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். பி. ஏ. படித்து வருகிறார் .அங்குள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்று இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை காணவில்லை. ஒடும் பஸ்சில் வைத்து யாரோ திருடிவிட்டனர். இது குறித்து அபிசினேகா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.