கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணி@மணிகண்டன்((வயது 26) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம், ...

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 43). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பேரூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார். அப்போது அரசு அஸ்பத்திரி அருகே வந்தபோது அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார். மதுகுடித்து விட்டு வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளை எடுத்தார். ...

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் விதிமுறை மீறல் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட எல்லைப்பகுதி மற்றும் பல்வேறு பகுதியில் அவ்வப்போது தணிக்கை நடத்தி விதிமுறை மீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அரசுக்கு உரிய இணக்க கட்டணம் மற்றும் பல்வேறு வரியினங்களை சரக்கு போக்குவரத்து வாகனங்கள் முறையாக ...

கோவை: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சேர்ந்தவர் சங்கர் ( வயது 32)இவர்  உக்கடம் -பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் உக்கடம் – பேரூர் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார்.இவர் கொடுக்க ...

கோவை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பூபதி ( வயது 22) அதே ஊரைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வீரபாண்டி (வயது 24) இவர்களும் பி.இ.பட்டதாரிகள்.இவர்கள் கோவை சரவணம்பட்டியில் இன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கு கொள்ள பஸ்சில் கோவைக்கு வந்தனர்.இன்று அதிகாலை 1:30 மணிக்கு பஸ்சை விட்டு ...

குனியமுத்தூர்: கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் டோனி தாஸ் (22). இவர் சுந்தராபுரம் அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருடைய நண்பர்கள் ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த ஆகாஷ் (23) சதீஷ் (21). நேற்று 3 பேரும் ஜவுளி எடுப்பதற்கு பஸ்ஸில் பயணம் செய்தனர். துணி எடுத்துவிட்டு சுந்தராபுரம் நோக்கி பஸ்ஸில் வந்தனர். ...

கோவை கடைவீதி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் தெய்வமணி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 45 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்த சபிக் என்ற ...

கஞ்சா போதையில் கத்தியால் குத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவையில் வெளியாகி பரபரப்பு கோவை சுங்கம் பகுதியில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் இருவர் கைது. சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை சுங்கம் பகுதியில் போதையில் இருந்த தந்தை மகன் ஆகியோர் எதிர்தரப்பினரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி ...

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டிய மாணவன் – சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரமாதேவி தாலுக்காவிற்கு உட்பட்ட மூக்கூடல் அமர்நாத் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா இறந்துவிட்டர். இவர்களது மகன் பென்னிஸ்குமார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம் பி ...

கோவை வடவள்ளியில் உள்ள மருதம் நகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 45 ) இவர் பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி மகேஸ்வரி(வயது 40).சம்பவத்தன்று காலையில பெரியசாமி கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் நுழைந்து 2 மர்ம ஆசாமிகள் மகேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் ...