பாட்டிலில் டீசல் விற்ற கோவை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேர் கைது..!

கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் படுத்து தூங்கிய மதுரை சேர்ந்த சுரேஷ் என்பவர் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டார் அல்லவா?இவருக்கு விதியை மீறி பாட்டிலில் டீசல் வழங்கியது யார் ?என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில் சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் டீசல் விற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த பங்க் பம்ப் ஆப்ரேட்டர் பீளமேடு லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 62) சிங்காநல்லூர் லட்சுமண நகரை சேர்ந்த கேசியர் பாலகிருஷ்ணன் ( வயது 59) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .இவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.