திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவர்,கண்டக்டர், மெக்கானிக் ஆகியோருக்கு இடையே பஸ் புறப்படுவது (டைமிங்) தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த 3 பேரும் சேர்ந்து பஸ் ...
கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சங்கர். பேராசிரியர் இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் வேளாண் பல்கலையில் பேராசிரியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் சண்முகம், அஸ்வின், பிராங்கிலின் என்பவர்களுடன் சேர்ந்து குடிநீர் விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஆனால் ...
கோவை ஒண்டிப்புதூர் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரவணக்குமாருக்கும் அவரது மாமனார் கிருஷ்ணசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணசாமி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணசாமி மீண்டும் ...
கோவை சாய்பாபா காலனியை அடுத்த ரமனகவுண்டர் லே அவுட்டை சேர்ந்தவர் நிர்மலா (வயது 44). பேராசிரியை. சம்பவத்தன்று இவர் தனது கணவருடன் அழகேசன் ரோடு முருகன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவர்களுக்கு எதிரே வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அந்த வாலிபர் திடீரென நிர்மலாவின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த ...
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவுசப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சூலூர் கண்ணம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று பள்ளபாளையம் – பாப்பம்பட்டி ரோட்டில் உள்ள ...
இரண்டாவது நாளாக ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனை நேற்று முதல் சென்னை உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ...
ஆவின் நிறுவனத்தில் 2020 – 2021-ம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் காலியாக இருந்த மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்களின் பணியிடங்கள் கடந்த 2020 – 2021-ம் ஆண்டுகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்பட்டன. ...
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). காவலாளி.இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆறுச்சாமி தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது சகோதரர் மகாலிங்கம் (50). இந்த நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் மற்றும் ஆறுச்சாமி ...
கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் டி.கே மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மணிகண்டன் தண்டு மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் மணிகண்டனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பீடி இல்லை என தெரிவித்துள்ளார். ...
கோவை உக்கடம் ,ஜி. எம். நகர், கோட்டை புதூரை சேர்ந்தவர் நசீர் (வயது 53) இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளா சென்றிருந்தார்.நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ20 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடிச சென்று விட்டனர் இது குறித்து ...