ஈஷாவுக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு.!!

கோவை : தெலுங்கானா மாநிலம், சித்தி பேட்டை, கஜ்வீலை சேர்ந்தவர் டொமலா மம்தா (வயது 40) இவர் தனது தாயார் ஜெயம்மாவுடன் ஈஷா யோகா மையத்திற்கு செல்வதற்காக கோவைக்கு ரயிலில் வந்தார். ரயிலை விட்டு இறங்கி ஆட்டோ ஏறுவதற்கு நடந்து சென்றனர். அப்போது ஜெயம்மா கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை காணவில்லை . யாரோ திருடி விட்டனர். இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.