கார் கண்ணாடியை உடைத்து திருட்டு..!

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். அவரது மகன் தீபன் சக்கரவர்த்தி ( வயது 29) இவர் நேற்று கோவை பீளமேட்டில் உள்ள ஒரு ஆடிட்டோரியம் கார் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரின் வலதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.  உள்ளே வைத்திருந்த 2 செல்போன்களை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்து தீபன் சக்கரவர்த்தி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.