திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் – 27பேர் கைது..!

கோவை மே 11 மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு நேற்று தகவல் வந்தது.. இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 49)கிருஷ்ணன் ( வயது 60) சேகர் (வயது 42) சுந்தரராஜ் (வயது 53) சுரேஷ்குமார் வயது 46 சபரிநாதன் ( வயது 40) கிருஷ்ணன் ( வயது 55) ரவிவர்மா ( வயது 33) ரங்கராஜ் ( வயது 44) கிருஷ்ணமூர்த்தி (வயது 28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 11,500 பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல அங்குள்ள சாரதா மில் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) பாலாஜி (வயது 43) அருண்குமார் (வயது 33) வேலுமணி ( வயது 51) செல்வன் (வயது 46) சிவக்குமார் (வயது 57) கிருஷ்ணராஜ் (வயது 31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 10 ஆயிரத்து 300 கைப்பற்றப்பட்டது.

மற்றொரு திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சூதாடியதாக சண்முகம் (வயது 57) பால மகேந்திரன் (வயது 42) வெங்கடேஷ் (வயது 34) பிரசாந்த் (வயது 35) வெங்கடாசலபதி (வயது 53) குணசேகரன் ( வயது 45) மணிகண்டன் (வயது 27) குமார் ( வயது 56) மாரியப்பன் ( வயது 58) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட 9 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.