வேன் மீது பைக் மோதி விவசாயி பரிதாப பலி – ஒருவர் படுகாயம்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48 ) விவசாயி. இவர் நேற்று பொள்ளாச்சி தொப்பம்பட்டியை சேர்ந்த பசுபதி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உடுமலை -பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பசுபதி ஓட்டினார்.கோமங்கலம் புதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த வேன் மீது பைக் மோதியது .இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் முத்துசாமி இறந்தார். படுகாயம் அடைந்த பசுபதி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து முத்துசாமியின் மனைவி மீனாட்சி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பைக் ஓட்டி வந்த பசுபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.