கோவையில் சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி – ஒருவர் கைது..!

கோவை ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டை சேர்ந்தவர் சீமான் (வயது 48) கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர் காந்திபுரம் சித்தாபுதூரில் ஒரு சீட்டு கம்பெனியில் மாதம ரூ 10 ஆயிரம் செலுத்தி வந்தார்.ரூ 2 லட்சம் செலுத்திய பிறகும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தை பார்த்த போது அது மூடி கிடந்தது. இதை நடத்தியவர்கள் மாயமாகிவிட்டனர் .இது காட்டூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அதை நடத்தி வந்த சிறுமுகை திருவள்ளுவர் நகரை சேர்ந்த சத்திய பிரியா ( வயது 31) என்பவரை கைது செய்தனர். கிருஷ்ணசாமி, , டேவிட் சுந்தர்ராஜன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.