மெழுகுவர்த்தி தீ படுக்கையில் விழுந்து மூதாட்டி உடல் கருகி பரிதாப பலி ..

கோவை பக்கம் உள்ள பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் டேனியல். இவரது மனைவி ஞானமணி (வயது 82) இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இவர் தனியாக வசித்து வந்தார். அவர்கள் வீட்டில் உள்ள நைலான் கட்டில் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். அது தவறி கட்டிலில் மேல் விழுந்து தீ பிடித்தது .இதில் அவரது உடல் முழுவதும் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் சேவியர் ஆலந்துறை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.