7வயது சிறுமியிடம் சில்மிஷம் வியாபாரி கைது…

கோவையை அடுத்த வடவள்ளி பக்கம் உள்ள அலமேலு மங்கை அவென்யூவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 56 )வியாபாரி, அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக் குமார் கடந்த மாதம் 4 -ந் தேதி தனது கடைக்கு சாமான் வாங்க வந்த 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சிஅடைந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்தார். உடனே அவர் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில் அசோக் குமார் தலைமறைவாகி விட்டார்..அவரை போலீசார் தேடி வந்தனர்.நேற்று அவரை கைது செய்தனர் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.