பிளஸ்1 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் தொழிலாளி கைது..!

கோவை : சேலத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 27) இவர் கோவையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கோவையை சேர்ந்த 16 வயது நிரம்பிய பிளஸ் 1 மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று ஒருதலை பட்சமாக காதலித்ததாக கூறப்படுகிறது .ஆனால் அந்த மாணவி மகேந்திரனிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியை சந்தித்த மகேந்திரன் நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி தான் தங்கி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் மகேந்திரன் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதுகுறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இது குறித்து தனது பெற்றோருடன் கூறி மாணவி அழுதார். அவரது பெற்றோர்கள் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.அதில் மகேந்திரன் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதையடுத்து மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து தேடி வந்தனர்.இந்த நிலையில் அவர் மும்பையில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போத்தனூர் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் மும்பைக்கு சென்றனர் .அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த மகேந்திரனை பிடித்து கோவைக்கு அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா அவரை கைது செய்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.