சட்டக் கல்லூரி மாணவர் வீட்டில் நகை, பணம் திருட்டு – மர்ம நபர் கைவரிசை..!

கோவை சாய்பாபா காலனி கே. கே .புதூர், 7-வது வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன் (வயது 32) இவர் கோவையில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பு 4-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் வீட்டைபூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். இரவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணம் ரூ.7, 500 மற்றும் 9 கிராம் எடை கொண்ட நவரத்தின மோதிரம்,கம்மல், தங்கச்செயின் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ரஞ்சித் கண்ணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.