மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து பீடி, சிகரெட், பணம் கொள்ளை..!

கோவை அய்யண்ண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜவஹர்ராஜ் ( வயது 52) இவர் வெரைட்டி ஹால் ரோடு -சி.எம்.சி காலணி சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு திறந்து கிடந்தது . கடையின் மேற்கூரையும் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பீடி சிகரெட்டுகள், பணம் ரூ 3 ஆயிரம் திருட்டுப் போயிருந்தது. இது குறித்து ஜவஹர் ராஜ் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.