நடுரோட்டில் கல்லூரி மாணவி மானபங்கம் – வாலிபர் கைது..!

கோவை பீளமேடு, ஐ. ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மகன் ரோஸ்லின் ( வயது 21) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் .காம். ( சி ஏ )இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள தண்ணீர் டேங்க் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மசக்காளிபாளையம், மகாலட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 28) என்பவர் மாணவி ரோஸ்லினை நடுரோட்டில் தாக்கி மானபங்கம் செய்தாராம். இதுகுறித்து ரோஸ்லின் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து ஜார்ஜை நேற்று கைது செய்தார்.இவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ஆவார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மானபங்க முயற்சி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..