வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு 

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு 

கோவை நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி என்பவரின் மகன் கோபி (40 ).இவர் பொதுப் பணித் துறையில் உதவி இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சென்னைக்கு சென்று உள்ளார். அந்த நேரத்தில் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் நபர் ஒருவர் கோபியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களது வீட்டிற்குள் மர்ம நபர் உலாவுவது போல இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார். உடனே கோபி தனது வீட்டில் எதிரில் வசிக்கும் எழில் என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். எழில் அங்கு சென்று பார்த்த போது கோபியின் வீட்டு முன் கதவு உடைந்த நிலையில் இருந்து உள்ளது .இதை தொடர்ந்து கோபி கோவைக்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த இரண்டே கால் பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இது குறித்து கோபி பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.