குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: காவல் துறையினர் விசாரணை

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: காவல் துறையினர் விசாரணை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட அதிகாரியாக விஜயகுமார் பணி புரிந்து வருகிறார். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள கோவை தருண் கார் ஒர்க் ஷாப் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 16 வயது சிறுவன் ஒருவன் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சிறுவனை மீட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து மருத்துவ சோதனையில் அந்த சிறுவனின் வயது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விஜயகுமார் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதே போல விளாங்குறிச்சி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ராஜாராம் ஹோம் அப்ளையன்ஸ் என்ற நிறுவனத்தில் 15 வயது சிறுவனை மீட்டனர். தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .