காரில் ஹாரனை அடித்து நபர் மீது தாக்குதல்: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் கைது !!!

காரில் ஹாரனை அடித்து நபர் மீது தாக்குதல்: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் கைது !!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் நடராஜன் என்பவரின் மகன் மூர்த்தி என்கிற மூர்த்தி குமார் .இவர் உதவி வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். இவர் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக தனது காரில் ஆர் எஸ் புரம் பகுதியில் நேற்று சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த நபர்கள் தாறுமாறாக பைக்கை ஓட்டி சென்று உள்ளனர். இதை தொடர்ந்து மூர்த்தி தனது காரில் ஹாரனை அடித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புல்லட்டில் சென்ற நபர்கள் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு மூர்த்தி இடம் தகராறு செய்தனர். மூர்த்தியை அவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த மூர்த்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மூர்த்தி ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மூர்த்தியை தாக்கியதாக ஜோஸ்வா என்கிற அருமை நாயகம் (33) மற்றும் லாரன்ஸ் என்பவரின் மகன் ஷமா ஷிர்கல் (36 )ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.