இந்து அமைப்பு நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது..!

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் பீமாபாண்டியன் (வயது 38) இவர் இந்து மக்கள் புரட்சி படை நிறுவன தலைவராக உள்ளார். இவருக்கும் ரத்தினபுரி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த மெக்கானிக் மனோஜ் (வயது 42) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று மனோஜ், பீமாபாண்டியனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பீமாபாண்டியன் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மனோஜை நேற்று கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கபட்டார்..