கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு.!!

கோவை போத்தனூர் சீனிவாசா நகர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் அகஸ்டின் அன்பு .இவரது மனைவி சீதாலட்சுமி ( வயது 33 ) இவர் சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் ஒரு கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார் . அப்போது யாரோ கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 10 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர் .இது குறித்து சீதாலட்சுமி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..