அதிக நேரம் செல்போன் பேசுவதை கணவர் கண்டித்ததால் மனைவி 2 குழந்தைகளுடன் திடீர் மாயம்…

கோவை அருகில் உள்ள மதுக்கரை மார்க்கெட், அன்பு நகரை சேர்ந்தவர் இளங்கோ. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நந்தினி ( வயது 26) இவர்களுக்கு ரித்திகா( வயது 6) ஈசி தார் ( 6 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தினி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பாராம். இதை அவரது கணவர் இளங்கோ கண்டித்தார் .இதனால் ஆத்திரமடைந்த நந்தினி நேற்று தனது இரு குழந்தைகளுடன் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.