25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..!

25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..!  கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் மனோகரன் வீதியைச் சேர்ந்தவர் காந்த ரூபன்(வயது 43) இவரது பெரியப்பா தங்கவேல் வெள்ளலூர் காந்தி நகரில் தனியாக வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்துவிட்டார்.இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன் வெள்ளலூரை சேர்ந்த சரவணன் மனைவி மகேஸ்வரி( வயது 37) என்பவரை ரூ.5 ஆயிரம் மாத சம்பளத்துக்குதங்கவேல் வீட்டில் வேலைக்கு வைத்திருந்தனர். கடந்த 10 -1 |20 23 அன்று வீட்டை சுத்தம் செய்த மகேஸ்வரி பீரோவில் இருந்த 25நகைகளை திருடி சென்று விட்டார்..இதுகுறித்து காந்தரூபன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வ வெள்ளலூர் சரவணன் மனைவி மகேஸ்வரியை நேற்று கைது செய்தனர் ..அவரிடம் இருந்து 25 பவுன் நகை மீட்கப்பட்டது.