சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு..

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்குள் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 60 வயது இருக்கும் அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் ?எப்படி செத்தார்? என்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது..