ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு..!

டந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன.

அதன் பிறகு சில நாட்கள் 3 மாநில முதல்வர்கள் யார் என அறிவிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 மாநிலத்திற்கும் முதலமைச்சர் தேர்வு குறித்து மேலிட பொறுப்பாளர் குழுவை பாஜக தலைமை நிர்ணயித்தது.

நாடாளுமன்ற அத்துமீறல்.. முக்கிய ஆதாரங்களை எரித்த லலித்.? தீவிரமடையும் விசாரணை.!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பழங்குடியினத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோ கலந்து கொண்டனர்.