மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 1847 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொடி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்களை இடமாற்றம் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு இருக்கிறார்.

பணியிடம் மாற்றும் தொடர்பான பட்டியலை வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப அவர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 1847 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர்கள், முதுநிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், பெண் காவலர்கள் என மொத்தம் 1847 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை காவல்துறையில் மட்டும் 340 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.