சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஜானகிராமன், கருப்பண்ண உடையார், மாரப்பன், ரசாக், வேழவேந்தன் ஆகியோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறுகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன் வகையில்; பூம்புகார் தொகுதி உப்பனாற்றின் குறுக்கே அணை கட்டப்படுமா? ...

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கான 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் குஷ்பு,கோவை சரளா,மனோபாலா,லதா சேதுபதி உள்ளிட்ட 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தலைவர், பொருளாளர், துணை தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ...

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் இன்று (மார்ச் 21) நேரில் ஆஜராகினர். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ...

தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் கோயில் நிலங்களை மீட்க இந்து முன்னணி உதவும் என மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்து முன்னணியின் கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் நீண்ட ...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் இந்தியாவின் நிலைப்பாடை குவாட் நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி போரை உடனடியாக நிறுத்த தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதற்கு எந்த நாடும் வருத்தம் தெரிவிக்காது என ஆஸ்திரேலியா தெரிவித்து இருக்கிறது. ரஷ்யாவின் போர் நடவடிக்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ...

சென்னை: காவிரி நீரானது டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மூலம் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்ப்பு காணப்பட்டது. காவிரியில் எந்தவொரு திட்டத்திற்கும், கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேகதாது அணை ...

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ...

நாமக்கல்: பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக் கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று பங்குனி மாத ...

ராமநாதபுரம்: ”தமிழகத்தில் ரவுடிகள், குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒழிக்கப்படுவார்கள்,” என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குற்றச்சம்பவங்கள் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கை, இனி செய்ய வேண்டியது குறித்துஆய்வு கூட்டம் டி.ஜி.பி., சைலேந்திர பாபு தலைமையில் நடந்தது. தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், ராமநாதபுரம் டி.ஜ.ஜி., மயில்வாகனன், எஸ்.பி.,க்கள் கார்த்திக் (ராமநாதபுரம்), செந்தில்குமார் ...

மதுரை: தாலிக்கு தங்கம் திட்டம்தான் உயர் கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டமாக மாற்றப்பட்டுள்ளது என்று மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாநகராட்சி வெள்ளிவீதியார் ...