ஓய்வூதியதாரர்களில் 1.73 லட்சம் பேரின் பென்சன்கள் நிறுத்தம்- தமிழக அரசு அதிரடி.!!

தமிழகத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலமில்லா வேளாண் தொழிலாளர்கள், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் இலங்கை அகதிகள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பு பென்ஷன் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

பென்ஷன் பெற்று வந்த ஓய்வூதியதாரர்களில் உயிரிழந்த 1.73 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழக அரசிற்கு வருடத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் சேமிப்பு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் 6,147 பேருக்கு வருவாய்த்துறை பென்ஷனை நிறுத்தியுள்ளது. அதனைப்போலவே தகுதியில்லாத 18,656 பேரின் விவரங்களை தமிழக அரசு சரிபார்த்து வருகின்றது. ஆதார் அட்டை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு பதிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

பென்ஷன் பெறக்கூடிய ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் சமூக பாதுகாப்பு பென்ஷன் வாங்குவோரிடம் வாழ்நாள் சான்றிதழ் கேட்கப்படுவதில்லை. அதனால் அரசு தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருக்கிறார்களா பென்ஷன் பெறுவோர் தகுதி பெற்றவர்கள் என்பதை கண்டறியப்படும். இதில் தகுதி இல்லாதவர்களுக்கு பென்ஷன் கிடைப்பது இனிவரும் நாட்களில் நிறுத்தப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.