தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தினமும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து, துறை வாரியாக உயர் அதிகாரிகளை அழைத்துத் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். காலையில் தலைமைச் செயலகம் வந்தால் மாலை 5 மணி வரை அங்கேயே இருந்து ஒவ்வொரு துறையின் முன்னேற்றம் மற்றும் திட்டங்கள் குறித்து ...
முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வரின் முதன்மை செயலாளரான செந்தில்குமாருக்கு நிதித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மின்துறை, தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் ...
திமுக – அதிமுக இணைவது தமிழ்நாட்டிற்கு நல்லது” என விசிக சட்டமன்றக் குழு தலைவரும், திண்டிவனம் எம்.எல்.ஏவுமான வன்னி அரசு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் முதல் கட்சியாக ஆதரவு அளித்தது. காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணியில் இணைவதாக ...
. நாளை மே 20ம் தேதி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ...
எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால், அவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்துள்ளார்.. இதற்கு பதிலாக எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவியைப் பறிக்க வேலுமணி தரப்பு பொதுக்குழுவை கூட்ட முயலுகிறது.. இந்நிலையில், ...
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவின் தொடர் பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 7-வது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் உடன்குடி மற்றும் திருச்செந்தூரில் நடைபெற்றது. கடந்த 16-ம் தேதி ...
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதட்டம் காரணமாக இந்தியாவின் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 9.07 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 222.64 கோடி அமெரிக்க டாலராக (ரூ. 20,825.01 கோடி) குறைந்துள்ளது. இந்தத் தகவலை ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி ...
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு தொழுகையின்போது மசூதிகள் நிறைந்து விடுவது உண்டு. இதனால் முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே சாலை அல்லது தெருக்களிலும் நின்று தொழுகை செய்து வந்தனர். இதற்கு உபி அரசு ...
சக தயாரிப்பாளர்கள் ரூ.20 கோடி கடனை திரும்ப கொடுக்காததால் மனமுடைந்து தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கடன் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் ...
பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து வருவது வேதனையளிக்கிறது.மன நிம்மதிக்காகவும், வேண்டுதல்களுக்காகவும், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவும் வரும் பக்தர்களிடத்தில் விரைவில் சுவாமி தரிசனத்திற்கு ...













